சோழவந்தானில், திமுக சார்பில் கருணாநிதி பிறந்தநாளில் அன்னதானம் வழங்கல்

சோழவந்தானில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழாவில், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Update: 2024-06-03 10:54 GMT

சோழவந்தானில், திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி பிறந்த நாளில் அன்னதானம் வழங்கிய திமுகவினர். 

சோழவந்தானில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா வெங்கடேசன் எம். எல். ஏ. அன்னதானம் வழங்கினார் .

முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை வடக்கு மாவட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன், சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ். எஸ் .கே. ஜெயராமன், பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் முன்னிலை வகித்தனர். சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம். எல். ஏ. தலைமை வகித்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

இதில், பேரூர் கழக நிர்வாகிகள் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள் இளைஞர் அணியினர் மாணவர் அணியினர் தொண்டர் அணியினர், தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் மகளிர் அணியினர் மற்றும் திமுகவின் பிற அணியினர் தொண்டர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முள்ளி பள்ளம் கிளைச் செயலாளர் கேபிள் ராஜா நன்றி கூறினார்.

Similar News