அலங்காநல்லூர் அருகே இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு பிரசாரம்

அலங்காநல்லூர் பகுதிகளில் தமிழ்நாடு அரசின் இல்லம் தேடிகல்வி திட்டம் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது

Update: 2021-10-30 09:00 GMT

அலங்காநல்லூர் பகுதிகளில் இல்லம் தேடிகல்வி திட்ட விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பகுதியில் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

 மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஓன்றியம் கோட்டைமேடு, கல்லணை, அலங்காநல்லூர் பகுதிகளில் தமிழ்நாடு அரசின் இல்லம் தேடிகல்வி திட்டம் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. வட்டாரக் கல்வி அலுவலர், ஓன்றியக் குழுவினர்கள் மற்றும் கோட்டைமேடு தலமை ஆசிரியை சத்யா, கல்லணை தலைமை ஆசிரியை ஹேமா ஜெயசீலி, நேதாஜி நகர் பள்ளி ஆசிரியர் மனோகரன், அலங்காநல்லூர் பள்ளி ஆசிரியை ஈஸ்வரிதேன்மொழி, அழகாபுரி புகழேந்தி, இடையபட்டி ஆசிரியை விக்டோரியா ஆகியோர் முன்னிலையில் இந்த விழிப்புணர்வு கலைநிகழ்சிகள் நடைபெற்றது. வட்டாரப் பொறுப்பாளர்கள் ஆசிரியர் சுதாகர், மூனீஸ்வரன் உள்பட இளநிலை ஆசிரியைகள் கலந்த கொண்டனர்.

Tags:    

Similar News