சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி 5ம் நாள் திருவிழா

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா ஐந்தாம் நாள் மண்டகப்படி அரசு போக்குவரத்து கழக சார்பில் நடைபெற்றது.

Update: 2022-06-11 11:15 GMT

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா ஐந்தாம் நாள் மண்டகப்படி அரசு போக்குவரத்து கழக சார்பில் நடைபெற்றது.

சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா ஐந்தாம் நாள் மண்டகப்படி அரசு போக்குவரத்து கழக சார்பில் நடைபெற்றது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் திருக்கோவில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐந்தாம் நாள் மண்டகப்படி, மதுரை அரசு போக்குவரத்து கழகம் சோழவந்தான் கிளை சார்பாக நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரை கோட்டம் நிர்வாக இயக்குனர் ஆறுமுகம் தலைமை வகித்தார். பிஆர்ஓ சந்தானம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சோழவந்தான் நகர் அரிமா சங்க தலைவர் டாக்டர் மருதுபாண்டியன் கலந்து கொண்டார். கிளை மேலாளர் விஸ்வநாதன், கண்காணிப்பாளர் மூர்த்தி, கிளை அலுவலர் தடி வீரன் தொழிற்சங்க நிர்வாகி பாலசுப்பிரமணியன், ஹபீப் முஹம்மது மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் ஓட்டுநர்கள் நடத்துநர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். அரசு போக்குவரத்துக் கழக கிளை சார்பில் நாடக மேடை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Tags:    

Similar News