திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்க ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டம்

திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்க ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-09-02 11:30 GMT

மதுரை மாவட்டம், திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில், முன்னாள் மாணவர் சங்க ஆண்டுப் பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் தொடக்கத்தில், முன்னாள் மாணவர் சங்கத் துணைத் தலைவர். சி.ஏ.கே.ஆர்.சத்ய நாராயணன் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் செயலர் சுவாமி வேதானந்த மற்றும் குலபதி சுவாமி அத்யாத்மனந்த ஆசி உரை வழங்கினர். கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் கல்லூரியின் வளர்ச்சி பற்றி உரையாற்றினார். சங்கத்தின் தலைவர் முரளி கிருஷ்ணன் தலைமை உரையாற்றினார். சங்கத்தின் செயலாளர் சி.ஏ.சங்கர், சங்கத்தின் கடந்த ஆண்டின் நிகழ்வுகள் பற்றி உரையாற்றினார்.

பொதுக்குழு கூட்டத்தில் வந்திருந்த உறுப்பினர்களின் ஒப்புதலோடு சங்கத்தின் வரவு செலவினை பற்றி முறையான அறிக்கையை, சங்கப் பொருளாளர் முனைவர் பட்டினத்தார் விளக்கி அறிவித்தார். சங்க உறுப்பினர்கள் அவர்களது ஆலோசனைகள் எதிர்பார்ப்புகளை ஒருவர் பின் ஒருவராக உரையாடினார்.

இதனைத்தொடர்ந்து சங்கத்தின் புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய தலைவராக சத்திய நாராயணன், புதிய செயலாளராக முனைவர் தீனதயாளன், புதிய துணைத் தலைவராக லோகநாதன் மற்றும் சுரேஷ் கண்ணன், புதிய துணை செயலாளராக சாய் சுகுமாரன் மற்றும் முனைவர் கோபி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

கல்லூரியில், அகத்தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ் பாபு, முதன்மையர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டாளர் முனைவர் ஜெய்சங்கர், மேனாள் முதல்வர்கள் முனைவர் ராமமூர்த்தி, முனைவர் ராஜா, மேனாள் துணை முதல்வர் ஜெயபாலன் மற்றும் மேனாள் பொருளியல் துறை ஆசிரியர் முனைவர் ஜெயபாலன், மேனாள் ஆங்கிலத்துறை பேராசிரியர் முனைவர் வெங்கடசுப்பு, மேனாள் விலங்கியல் துறை பேராசிரியர்கள் முனைவர் நாட்டு துறை மற்றும் முனைவர் சந்திரன், மேனாள் வேதியல்துறை பேராசிரியர் முனைவர் ராஜேந்திரன் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு சங்கத்தின் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னாள் மாணவர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் வடிவேல் ராஜா நன்றி உரை வழங்கினார். கல்லூரி அகத்தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ் பாபு, முதன்மை மற்றும் தேர்வு கட்டுப்பாட்டாளர் முனைவர் ஜெய்சங்கர், குருகுல ஒருங்கிணைப்பாளர் முனைவர் சந்திரசேகரன், வணிகவியல் கணினி பயன்பாட்டு துறை பேராசிரியர்கள் முனைவர் பிரேமானந்தம், கார்த்திகேயன், முனைவர் மாரிமுத்து, விலங்கியல் துறை பேராசிரியர் முனைவர் காமாட்சி,  மற்றும் வேதியல் துறை பேராசிரியர் தர்மானந்தம் சங்க கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை அந்தந்த துறை சார்ந்த முன்னாள் மாணவர்கள் அந்தந்த துறை மாணவர்களுக்கு மேற்படிப்பு மற்றும் தொழில் சார்ந்த விஷயங்களை விளக்கிக் கூறினர்.

Tags:    

Similar News