மதுரை அருகே வேளாண் ஒருங்கிணைந்த திட்டம்: அமைச்சர் மூர்த்தி தொடக்கம்

பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி வேளாண் இடுபொருள், தென்னை மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கினார்

Update: 2022-05-24 03:15 GMT

மதுரை அருகே ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை அமைச்சர் ப. மூர்த்தி தொடக்கி வைத்தார்

மதுரை அருகே ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை அமைச்சர் ப. மூர்த்தி தொடக்கி வைத்தார்

வேளாண்மை- உழவர் நலத்துறை கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2021-2022 காணொலி காட்சி முலம் தமிழ்நாடு முதலமைச்சர், துவக்கி வைக்கப்பட்டதை தொடர்ந்து, மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், தெ.மேட்டுப்பட்டியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ்சேகர் தலைமையில்,  நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி,  வேளாண் இடுபொருள், தென்னை மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கினார். நிகழ்வில், மதுரை தெற்கு எம்எல்ஏ பூமிநாதன், சோழவந்தான்  சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் உடன் உள்ளனர். 

Tags:    

Similar News