மதுரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ் சேகர், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் ஆகியோர் பார்வையிட்டனர்

Update: 2022-08-06 09:30 GMT

முகாமினை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ் சேகர், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் ஆகியோர் பார்வையிட்டனர்

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாமை மதுரை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் ஏற்பாட்டில், மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதுரை வெள்ளிவீதியார் மாநகராட்சி பள்ளி வளாகத்தில், மாற்றுத்திறனாளி களுக்கான முகாம் சிறப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முகாமினை, தொடங்கி வைத்து மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ் சேகர், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் ஆகியோர் பார்வையிட்டனர்.

இந்த நிகழ்வில், மதுரை மாநகராட்சி மத்திய மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி மிசா பாண்டியன்,மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன்,மாநகராட்சி கல்விக்குழு தலைவர் ரவிச்சந்திரன்,மாமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரன், மகாலெட்சுமி நவக்கோடி,ஜென்னியம்மாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News