ஜல்லிக்கட்டு காளையை திருடிய நண்பனை கொலை செய்த 4 பேர் கைது

சோழவந்தான் அருகே கரட்டுப்பட்டியை சேர்ந்த இளைஞர் ரோஷன் என்ற கோட்டைச்சாமி மாடு திருடியதால் நண்பர்களால் கொலை செய்யப்பட்டார்;

Update: 2021-11-10 03:00 GMT

ஜல்லிக்கட்டு காளையை திருடிச் சென்ற நண்பனை கொலை செய்துவிட்டு கிணற்றில் வீசி நாடகமாடிய நண்பர்கள் நான்கு பேர் கைது  செய்யப்பட்டனர்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள கரடி பகுதியை சேர்ந்த இளைஞர் ரோஷன் என்ற  கோட்டைச்சாமி(23 ). இவர் மீது வழிப்பறி கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந் நிலையில் கோட்டைச்சாமி கடந்த 7ஆம் தேதி  கல்லைக்கட்டி விவசாய கிணற்றில்  வீசி கொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து சோழவந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து  மேற்கொண்ட தீவிர விசாரணையில், கேரளாவில் வேலை பார்த்து வந்த கோட்டைசாமி தீபாவளி பண்டிகைக்காக. கரட்டுப்பட்டிக்கு    வந்துள்ளார்.  அதே  பகுதியை   சேர்ந்த தனது நண்பர்  சிவா வீட்டில் வளர்க்கப்பட்ட    ஜல்லிக்கட்டு காளையை   திருடி விற்றதும், தகவல்  தெரிந்த சிவா,  திருடி விற்கப்பட்ட      ஜல்லிக்கட்டு காளையை குடும்பத்தினர் உதவியுடன் பணத்தை கொடுத்து மீட்டுள்ளார்

இந்த திருட்டு சம்பவத்தால் கோட்டைச்சாமிக்கும்   சிவாவுக்கும்  இடையே  தகராறு  ஏற்பட்டுள்ளது அப்போது மீண்டும் ஜல்லிக்கட்டு காளையை திருடி கேரளாவுக்கு அனுப்பி விடுவேன் என்று கோட்டைசாமி சிவாவை மிரட்டியுள்ளார் இதனால் ஆத்திரமடைந்த சிவா அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான சுபாஷ் ஜெயசூர்யா பூவேந்திரன் ஆகியோர் உதவியுடன் கோட்டைச்சாமிியை மது குடிக்க விவசாய கிணறு அருகே அழைத்து சென்றுள்ளனர்.

மது குடிக்கும்போது கோட்டைசாமி 4 பேரும் சேர்ந்து  அரிவாளால் வெட்டி கொலை செய்து, உடலை கல்லை கட்டி கிணற்றில் போட்டு விட்டு அங்கிருந்து சென்றனர்.  பின்னர் எதுவும் தெரியாதது போல், இறந்த கோட்டைச்சாமி உடலை கிணற்றிலிருந்து  மீட்பது போல் நாடகமாடி உள்ளனர்.  இந்த நிலையில், குற்றவாளிகளை பிடிக்க சோழவந்தான் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த  சுபாஷ், ஜெயசூரியா, பூவேந்திரன், சிவா நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் கொலை செய்த குற்றவாளிகள் என தெரியவந்தது. போலீசார் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் கோட்டைச்சாமி நண்பர்கள் என்பதும் , ஜல்லிக்கட்டு காளையை திருடியதற்காக  நண்பனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Tags:    

Similar News