பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்: ரவுடி கைது

Update: 2021-03-11 01:52 GMT

மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பத்துக்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியை கைது செய்து காவல்துறையினர் விசாரணை.

மதுரை ஜெயந்திபுரம் பகுதியில் முன்விரோதம் காரணமாக ரவுடி கும்பல் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திடீர் சோதனையில் ஈடுபட்ட ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் , சட்டவிரோமாக பதுக்கி வைத்திருந்த நான்கு நாட்டு வெடிகுண்டுகள், இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் நான்கு வாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கைப்பற்றி உள்ளனர். இது தொடர்பாக பிரபல ரவுடி பச்சைகறி சௌந்தர் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இவர் மீது மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News