அலங்காநல்லூர் பத்திரபதிவு அலுவலகத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு

Update: 2021-06-10 09:55 GMT

மதுரை, அலங்காநல்லூரில் உள்ள பத்திரப் பதிவு அலுவலகத்தில்  தமிழக வணிகவரி மற்றும் பத்திர பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி ஆய்வு மேற்கொண்ட போது.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் உள்ள பத்திரப் பதிவு அலுவலகத்தில் வியாழக்கிழமை தமிழக வணிகவரி மற்றும் பத்திர பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

அவர், முன்னதாக அலுவலக வாசலில் இருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்ததுடன், பதிவு செய்வதில் ஏதாவது இடர்பாடுகள் உள்ளதா? எனக் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, சோழவந்தான் சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடேசன் உடனிருந்தார்.

Tags:    

Similar News