உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு வருகிற 24 முதல் ஜனவரி 2 வரை விடுமுறை

கிறிஸ்துமஸ் பண்டிகை நாளையொட்டி மதுரை உயர்நீதிமன்ற கிளை வருகிற 24-ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது;

Update: 2021-12-23 01:24 GMT

சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு

மதுரை மாவட்டம் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை முன்னிட்டு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வருகிற 24-ஆம் தேதி முதல் ஜனவரி இரண்டாம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .

விடுமுறைகால நீதிமன்றம் வேலை நாளில் அதாவது வருகிற 29-ஆம் தேதி மற்றும் பணியாற்றும் நீதிபதிகள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது

நீதிபதிகள் சி வீ .கார்த்திகேயன் ,ஸ்ரீமதி ஆகியோர் அனைத்து வழக்குகளையும் விசாரிக்கின்றனர்

டிவிசன் பெஞ்ச் விசாரணை முடிந்த பின்பு தனி அமர்வில் நீதிபதி சிவகார்த்திகேயன் அனைத்து ரிட் மனுக்களையும் விசாரிக்கிறார்.

நீதிபதி ஸ்ரீமதி மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்கிிறார். 

நீதிபதி ஆனந்தி அனைத்து கிரிமினல் மனுக்களையும் விசாரிக்கிறார்.

வழக்கறிஞர்கள் தங்களின் வழக்குகள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும். mdubenchvacl@gmail.com   என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பும்படி உயர்நீதிமன்ற பதிவாளர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News