வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த மதுரை மாவட்ட கண்காணிப்பாளர்

மதுரை மாவட்டம் மேலூரில் கனமழையால் வெள்ளம் சூழ்ந்த வீடுகளை, மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார்.

Update: 2021-11-27 00:30 GMT

மக்களிடம் குறைகளை கேட்டறிந்த, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன்.

மதுரை மாவட்டம் மேலூர் கண்மாய்படடி வட்டாரத்தில்,  கனமழை பெய்துள்ளது. இதனால், தாழ்வான இடங்கள், குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து,  பாதிக்கப்பட்ட   கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களை, மேலுர் வட்டாட்சியர் மீட்டு, அரசு பள்ளியில் தங்க வைத்துள்ளார். இந்நிலையில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், அப்பகுதி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டார். 

Tags:    

Similar News