மதுரை நகரில் மதுபாட்டில்கள் விற்றவர் கைது: பாட்டில்கள் பறிமுதல்

மதுரை நகரில் மதுபான பாட்டில்கள் விற்றவரை கைது செய்து அவரிடமிருந்து 60 பாட்டில்களை போலீசார் பறிமுதுல் செய்தனர்.

Update: 2021-06-07 09:00 GMT

மதுரை எஸ். எஸ். காலனி காவல் எல்லைக்குட்பட்ட பொன்மேனி மெயின் ரோடு அம்பேத்கர் சிலை அருகில் உள்ள மைதானத்தில் வைத்து , மதுபானங்களை விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய எஸ் எஸ் காலனி போலீசாருக்கு தகவல் வந்தது தகவலின் படி, எஸ் .எஸ் .காலனி காவல் ஆய்வாளர் உத்தரவின்படி, தனிப் படை தலைமைக் காவலர் சரவணகுமார் சென்று பார்த்தபோது , கள்ளத்தனமாக மது விற்பனை செய்தது தெரிய வந்தது.

மது விற்பனை செய்த பிரபு ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்தவர் கரி மேட்டில் உள்ள அரசு மதுபானக் கடை பாரில் பணி புரிந்து வருகிறார் என்பது விசாரணையில் தெரியவந்தது . இவரிடமிருந்து, 180 மி.லி.கொள்ளளவு கொண்ட 78 எண்ண ம் மது பாட்டில்களை பறிமுதல் செய்து பிரபுவை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News