மதுரையில் உயிரிழந்த பாரத் கேஸ் ஊழியர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
அகில இந்திய பாரத் கேஸ் விநியோகஸ்தர்கள் சங்கமும் தமிழ்நாடு பாரத்கேஸ் விநியோகஸ்தர்கள் சங்கமும் இணைந்து பாரத்கவாச் என்னும் திட்டத்தை தொடங்கியுள்ளனர். அதன்படி பாரத்கேஸ் ஊழியர்கள் யாரேனும் இறந்து போனால் அவர்கள் குடும்பத்திற்கு பாரத் கேசின் அனைத்து ஊழியர்களும் இணைந்து உதவுவதற்காக இத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. சேலத்தில் விஜயகுமார் என்ற டெலிவரி மேன், மதுரையில் துரைப்பாண்டி என்ற டெலிவரிமேனும் இறந்துபோனார்கள்.
இதை தொடர்ந்து அகில இந்திய பாரத்கேஸ் அதிகாரிகள், விநியோகஸ்தர்கள் மற்றும் அவர்களது ஊழியர்கள் அனைவரும் இணைந்து விஜயகுமார் குடும்பத்திற்கு ரூ 5 லட்சமும், துரைபாண்டி குடும்பத்திற்கு ரூபாய் 3 லட்சமும் வழங்கியுள்ளனர். இத்தொகையை பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடேஷன் சீப் ஜெனரல் மேனேஜர் திலக் விஜய் நரசிம்ஹா வழங்கினார். இதில் விநியோகஸ்தர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.