ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்யக்கோரி மதுரையில் ஆர்ப்பாட்டம்

ராஜீவ் காந்திகொலை வழக்கில் கைதான பேரறிவாளன் உள்பட 7 தமிழரை விடுதலை செய்யக் கோரி புரட்சிகர கண்ணகி மக்கள் கட்சியினர் போலீஸ் வேன்டயர்க்கு அடியில் படுத்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2020-12-30 12:00 GMT

மதுரை பழங்காநத் தம் கோவலன் பொட்டலின் புரட்சிகர கண்ணகி மக்கள் கட்சி மாநிலப் பொதுச் செயலாளர் வேலு பிரபாகரன் , தீலீபன்செந்தில் மற்றும் பல்வேறு அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் பேரறிவாளன் உட்பட 7 தமிழரை விடுதலை செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாக வந்தனர்.

அப்போது போலீசார் தடுத்து நிறுத்தியதால் திடீர் என போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் போலீஸ் வேனுக்கு அடியில் படுத்துக் கொண்டனர்.

இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி போலீஸ் வேனில் ஏற்றி கைது செய்தனர். இந்த சம்பவத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திலீபன்செந்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது ,

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் ரவிச்சந்திரன் உள்பட 7 பேர் 29 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 7 பேர் விடுதலை செய்யக்கோரி தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் கையெழுத்திட்டும், ஆளுநர் கையெழுத்து போடாமல் காலம் தாழ்த்துவதை கண்டித்து ஆளுநர் ராஜினாமா செய்ய வேண்டும், ஆளுநர் உடனடியாக பதவி விலக வேண்டும் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News