திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா சரவண பொய்கை அருகே தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இருந்து தேர்தல் பரப்புரையை துவக்கினார் :;
திருப்பரங்குன்றம் கோவில் வாசலில் அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் முதல் பரப்புரையை துவக்கிய ராஜன் செல்லப்பா,.பரப்புரையின் போது, அதிமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து உள்ளது. தொடர்ந்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த இரட்டை இலைக்கு வாக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் பேருந்து நிலையம் கார் பார்க்கிங் அமைத்து தரவும் மயில்கள் சரணாலயம் ஏற்படுத்தித் தரவும், திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் ஸ்கேன் சென்டர் கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்தி தரவும் உறுதியளித்தார்.
3 ஆண்டுகளில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்து, வடபழஞ்சி தொழில்நுட்ப பூங்கா துவங்கி 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளித்திடவும் தென்கால் கண்மாயில் படகு குழாம் அமைத்து படகு சவாரி ஏற்பாடு செய்து சுற்றுலா மேம்படுத்தப்படும் என்று கூறினார்.
மல்லிகை மலர் சென்ட் தொழிற்சாலை, வலையன்குளம் பகுதியில் காய்கறிகள் ,பழங்கள் பதனிடும் தொழிற்சாலை அமைத்தல் போன்ற வாக்குறுதிகளை அளித்தார்.