மதுரை மாவட்டத்தில் கொரோனா 2 ம் அலை பரவாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என கலெக்டர் அன்பழகன் கூறினார்.
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 100 சதவீத வாக்குப்பதிவு செய்வதற்கான விழிப்புணர்வு ஆட்டோக்கள் பேரணியை கலெக்டர் அன்பழகன் தொடங்கி வைத்தார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்பழகன் கூறுகையில் மதுரை மாவட்டத்தில் கொரோனா 2 ம் அலை பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவல் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது, தேர்தல் பணி ஒரு புறம் நடைபெற்றாலும், கொரோனா தடுப்பு பணிகள் மற்றொரு புறம் நடைபெறுகிறது, தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பாக பயிற்சி நடைபெறும் இடங்களில் தடுப்பூசி வழங்கப்படும் என கூறினார்.