ஜெயலலிதா ஆன்மா மன்னிக்காது: பாஜக செயலாளர் சீனிவாசன்
திமுக ஆட்சி அமைப்பதற்கு அமமுக காரணமாக இருந்தால் அவர்களை ஜெயலலிதா ஆன்மா மன்னிக்காது;
பாரதிய ஜனதா கட்சி மதுரை மாநகர் புதூர் மண்டல் சார்பாக நடைபெற்ற பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாஜக மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியது,
அதிமுக பாஜக கூட்டணி மிக விரைவில் உறுதி செய்யப்பட்டு எத்தனை இடங்களில் பாஜக போட்டியிடுகிறது. எந்தெந்த இடங்களில் போட்டியிடுகிறது என்பதைப் பற்றியெல்லாம் இன்னும் சில நாட்களுக்குள்ளாக தெரியவரும், வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற கூடிய கூட்டணியாக இந்தக் கூட்டணி இருக்கும். அமமுக வை பொருத்தவரை எங்கள் தலைமையில் கூட்டணி அமைய வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியிருப்பது ஏற்க கூடியது அல்ல. தொடர்ச்சியாக பல வாக்கு சதவீதத்தை இழந்துள்ளது, சட்டமன்ற தேர்தலில் அவர்கள் தனித்து போட்டியிட்டால் திமுக ஆட்சிக்கு வருவதற்கு அவர்கள் காரணமாக இருப்பார்கள். இதை முதல்வராக இருந்த ஜெயலலிதா ஆன்மா கூட மன்னிக்காது. ஜெயலலிதா உயிரோடு இருப்பார்களேயானால் திமுகவை ஆட்சியில் அமர வைக்க மாட்டார். சசிகலா டிடிவியின் நோக்கம் திமுகவை வெற்றிபெற செய்வதாக இருக்கிறது அவர்கள் திமுகவின் பீ டீம் ஆக செயல்படுகின்றனர், இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது.
அதிமுக, அமமுக இணைவதற்கு பாஜக எந்த ஒரு அழுத்தமும் கொடுக்கவில்லை. அதை முழுவதும் தீர்மானிக்க வேண்டியது அதிமுக மட்டுமே, நாங்கள் எதையும் வலியுறுத்தவில்லை எங்களது கூட்டணி அதிமுகவுடன் மட்டுமே. தேமுதிக தனியாக நிற்க தயார் என்ற கேள்விக்கு கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும் நேரத்தில் இது போன்ற வார்த்தைகள் வருவது சகஜம்தான். இந்த ஆனால் அவர்கள் வார்த்தைகளுக்கு அர்த்தம் கிடையாது. அவர்கள் அதிமுகவுடன் கூட்டணி வைக்க நினைப்பதாலே இப்படி உரிமையுடன் கோபம் அடைகின்றனர். தேர்தல் அறிவிக்கப்படும் வரை ஒரு முதலமைச்சர் எந்த முடிவு வேண்டுமானாலும் எடுக்க அரசியலமைப்பில் உள்ளது. அதையே தமிழக முதல்வர் செய்துள்ளார் அதை நான் பாராட்டுகின்றேன்.