மதுரையில் அரசியல் தலைவர்கள் சிலை துணியால் மூடி மறைப்பு

Update: 2021-03-01 12:00 GMT

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதனையொட்டி மதுரையில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் சிலைகள் முடியும் வரைக்கும் பணியை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். இதன்படி மதுரை நீதிமன்றம் அருகே முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா, மதுரை சிம்மக்கல் பகுதியிலுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை, மதுரை நெல்பேட்டையில் உள்ள முன்னாள் முதல்வர் அண்ணா சிலை ஆகியோரின் உருவச் சிலையை துணியால் மூடி மறைக்கப்பட்டுள்ளன. மேலும் மதுரை மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி கொடிக்கம்பங்களும் அகற்றும் பணியில் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News