பாதயாத்திரை செல்ல தடை - விஹெச்பி தலைவர் கைது
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் விஸ்வ ஹிந்து பரிசத் மாநில பொறுப்பாளர் சேதுராமனை காவல்துறையினர் கைது செய்தனர் .;
விஸ்வ ஹிந்து பரிசத் மாநில பொறுப்பாளர் சேதுராமன் தலைமையில், பழநிக்கு பாதயாத்திரை செல்ல இருந்தனர். அதை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
இவர்கள் ஆண்டுதோறும், பாதயாத்திரையை பழனிக்கு செல்ல திருப்பரங்குன்றம் முருகன் கோயிலிருந்து தொடங்குவது வழக்கம். இந்த ஆண்டும் பாதயாத்திரையை திருப்பரங்குன்றத்திலிருந்து, பழனிக்கு செல்ல முற்பட்டபோது, போலீஸார் இவர்களை தடுத்து நிறுத்தி, அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் அனைவரையும் அடைத்து வைத்தனர்