அரசு ஊழியர் போராட்டத்திற்கு ஆதரவு –கூட்டுறவுத்துறை சங்கம்
தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் 14 வது பேரவை கூட்டம் மதுரை மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள அலுவலக கட்டிடத்தில் நடைபெற்றது.;
தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் 14 வது பேரவை கூட்டம் மதுரை மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள அலுவலக கட்டிடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கூட்டுறவுத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 15க்கும் மேற்பட்ட முக்கிய தீர்மானங்கள் நிறவேற்றப்பட்டன. அதில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த கோரியும், கூட்டுறவுத்துறையில் பணியின் போது மரணமடைந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும், ஆதிஷேய்யா பணியாளர் சீரமைப்பு குழுவின் பரிந்துரையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் பிப்ரவரி 2 ம் தேதி முதல் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் நடத்தும் காலவரையற்ற போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கப்படும் என அதன் பொதுச்செயலாளர் செளந்திரநாதன் தெரிவித்தார்.