பட்டாசு விற்பனை தடையை மறுபரிசீலனை செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

டெல்லி, ஒடிசா, ராஜஸ்தான், ஹரியானா ஆகிய 4 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை.

Update: 2021-10-15 14:14 GMT

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த தடை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று 4 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் "மாண்பமை உச்சநீதிமன்றம் மற்றும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி, தயாரிக்கப்பட்ட பட்டாசுகளுக்கு அனுமதி அளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.

டெல்லி, ஒடிசா, ராஜஸ்தான், ஹரியானா ஆகிய 4 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த கோரிக்கையை கடிதம் மூலம் தெரிவித்தள்ளார்.

Tags:    

Similar News