கோடநாடு வழக்கு: மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல்
இவ்வழக்கில் 2 ம் நபரான வாளையாறு மனோஜ் தரப்பில் இரண்டாவது முறையாக மாவட்ட நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.;
உதகை மாவட்ட நீதிமன்றம்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக கருதப்படும் வாளையார் மனோஜ்க்கு கடந்த மாதம் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், வாளையார் மனோஜ்க்கு ஜாமீனிலில் வர யாரும் உத்தரவாதம் அளிக்கவில்லை என்பதால் நிபந்தனைகளை தளர்த்த கோரி அவரது வழக்கறிஞர் முனிரத்தனம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
கடந்த 14 தேதி நடைப்பெற்ற இந்த மனு மீதான விசாரணையில், 50 ஆயிரம் சொத்து மதிப்பும், ரத்த சொந்தங்கள் இருவர் உத்திரவாதம் வழங்கினால் பிணை வழங்கப்படும் என நீதிபதி சஞ்சய் பாபா உத்திரவிட்டிருந்தார். இருப்பினும் இந்த உத்தரவில் தளர்வு வேண்டி வாளையாறு மனோஜ் தரப்பில் இரண்டாவது முறையாக இன்று மாவட்ட நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. நாளை இந்த மனு மீதான விசாரணை நடைப்பெறுகிறது.