தனியார் தொழிற்சாலையில் 30க்கும் மேற்பட்ட பெண்களுக்கு திடீர் வாந்தி மயக்கம்

Food Poisoning Vomiting -தனியார் தொழிற்சாலையில் 30க்கும் மேற்பட்ட பெண்களுக்கு திடீர் வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-10-08 05:15 GMT

தனியார் தொழிற்சாலையில் வழங்கிய இரவு உணவு சாப்பிட்டு உடல் பாதிப்பு ஏற்பட்ட தொழிலாளர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்திருந்தனர்.

Food Poisoning Vomiting -காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே உள்ள இருசக்கரம் மற்றும் கார்களுக்கு வயரிங்கள் தயாரிக்கும் தனியார் உற்பத்தி தொழிற்சாலையில் பல்லி விழுந்த இரவு உணவை சாப்பிட்டவர்களில் சுமார் 30க்கும் மேற்பட்ட பெண்களுக்கு திடீர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு பரபரப்பை ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு கூட்ரோடு பகுதியில் இரு சக்கரம் மற்றும் கார்க்ளுக்கான வயரிங்கள் தயாரிக்கும், மதர்சன் சுமி சிஸ்டம்ஸ் லிமிடெட் (MOTHERSON SUMI SYSTEMS LTD ) என்ற தனியார் உற்பத்தி தொழிற்சாலை கடந்த ஒன்பது வருடங்களாக இயங்கி வருகிறது.

இந்த தொழிற்சாலையில் வாலாஜாபாத் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் என மூன்று ஷிப்ட்கள் வீதம் சுமார் 6ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பணிப்புரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் இத் தொழிற்சாலையில் இன்றைய தினம் இரவு சிப்ட்டில் வேலை செய்த சுமார் 3ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இத் தொழிற்சாலையிலேயே இயங்கி வரும் கேண்டினில் இரவு நேர உணவை சாப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் இத் தொழிற்சாலையில் இரவு நேர உணவை சாப்பிட்ட போது உணவில் பல்லி ஒன்று இருந்ததாக கூறப்படுகிறது. பல்லி இருந்த உணவை உண்டவர்களில் சுமார் 30க்கும் மேற்பட்டவர்களுக்கு திடீர் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இது குறித்து தகவலறிந்த தொழிற்சாலை நிர்வாகமானது உடனடியாக வாந்தி மயக்கமடைந்த சுமார் 30க்கும் மேற்பட்ட பெண்களை உடனடியாக தொழிற்சாலை பேருந்து மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜாபாத் பகுதியில் இயங்கு வரும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அதை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சற்று கடுமையாக பாதிக்கப்பட்ட சில பெண்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும்,மீதமுள்ளவர்கள் பொது பிரிவிலும் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு அங்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இருந்தபோதிலும் தற்போது வரையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் யாரும் சிகிச்சை பெறவில்லை என தனியார் மருத்துவமனை மற்றும் தொழிற்சாலை நிர்வாகாம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலையில் பல்லி இருந்த இரவு உணவு உண்டவர்களில் சுமார் 30பெண்களுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தொழிற்சாலையில் இரவு சிப்ட்டில் பணி புரிந்தவர்களிடையே கடும் பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இதன் காரணமாக இத் தொழிற்சாலையில் இரவு நேர சிப்ட் நிறுத்தப்பட்டு இரவு நேர சிப்டில் இருந்த அனைவரையும் தொழிற்சாலை நிர்வாகமானது வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது.

மேலும் இது குறித்து தகவலறிந்து பாதுகாப்பிற்காக காஞ்சிபுரம் காவல் உட்கோட்ட டி.எஸ்.பி.ஜூலியர் சீசர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து வாலாஜாபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காலை நிலவரப்படி அனைவரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர் என்றும் உள்ள தனியார் கேட்டரிங் நிறுவனம் உணவு தயாரித்து இந்நிறுவனத்திற்கு சப்ளை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News