உத்திரமேரூர் அருகே கொரோனா தடுப்பூசி முகாமை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

உத்திரமேரூர் அருகே கிளக்காடி ஊராட்சியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை எம்எல்ஏ சுந்தர் தொடங்கி வைத்தார்.

Update: 2021-07-25 14:00 GMT

உத்திரமேரூர் அருகே கொரோனா தடுப்பூசி முகாமை எம்எல்ஏ சுந்தர் தொடங்கி வைத்தார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பொது சுகாதாரம் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில், உத்திரமேரூர் ஒன்றியம் கிளக்காடி ஊராட்சியில், கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது..

உத்திரமேரூர் தி.மு.க., எம்.எல்.ஏ., சுந்தர் துவக்கி வைத்து கிராமவாசிகள் மற்றும் 100 நாள் வேலை உறுதி திட்ட பணியாளர்கள் என அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

சாலவாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கிருஷ்ணஸ்ரீ தலைமையிலான மருத்துவ குழுவினர் இம்முகாமில்   183 பேருக்கு தடுப்பூசி செலுத்தினர். 

Tags:    

Similar News