காஞ்சிபுரம் : ஓரிக்கை மணி மண்டபத்தில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்.

காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கான இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2021-08-13 11:30 GMT

 ஓரிக்கை மகா பெரியவர் மணி மண்டபத்தில் மருத்துவர் சாய்நாதன் தலைமையில் நடைபெற்ற இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்.

காஞ்சிபுரத்தை அருகே ஓரிக்கையில் அமைந்துள்ள மகா பெரியவர் மணிமண்டபத்தில் காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜூலை 24 ஆம் தேதி முதல் வரும் செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி வரை சாதுர் மாஸ்ய விரதத்தை அனுஷ்டித்து வருகிறார்.

இந்நாட்களில் மணிமண்டபத்துக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக அவ்வளாகத்தில் சங்கரா பல்கலைக்கழகத்தின் சார்பில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

ஆயுர்வேத மருத்துவர் சாய்நாதன் தலைமையிலான குழுவினர் இலவசமாக மருத்துவ ஆலோசனைகளும், மருந்துகளும் வழங்கி வருகின்றனர்.

இது குறித்து மருத்துவர் சாய்நாதன் கூறியது: 

ஜூலை 24 முதல் செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி வரை தினசரி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இலவச ஆயுர்வேத மருத்துவ முகாமை மணி மண்டப வளாகத்தில் நடத்தி வருகிறோம். வெள்ளி,சனி,ஞாயிறு என வாரத்தில் 3 நாட்கள் மட்டும் மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

வெளிநோயாளிகளுக்கு மருந்துகளும், மருத்துவ ஆலோசனைகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேல்சிகிச்சை தேவைப்படுவோருக்கு மட்டும் சென்னை பூந்தமல்லியில் உள்ள ஜெயேந்திர சரஸ்வதி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறோம்.

எனவே பக்தர்கள்,பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறும் தெரிவித்தார்.

Tags:    

Similar News