வைப்பு தொகை ஆவணங்கள் மூலம் 32 லட்சம் மோசடி: அதிமுக கூட்டுறவு சங்க தலைவர் கைது

கீழ்பேரமநல்லூர் கூட்டுறவு வங்கியில் 32 லட்சம் முறைகேடு செய்த தலைவர், செயலாளர், நியாயவிலைகடை ஊழியர் 3 பேர் கைதாகினர்

Update: 2021-09-30 12:15 GMT

காஞ்சிபுரம் அடுத்த காலூர் பகுதியில் அமைந்துள்ளது கீழ்பேரமநல்லூர் தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கி

காஞ்சிபுரம் அடுத்த காலூர் பகுதியில் அமைந்துள்ளது கீழ்பேரமநல்லூர் தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கி, சுமார் 20 ஆண்டுகளாக சுமார் 3000 உறுப்பினர்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்த தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கி மூலம் விவசாய கடன், தங்க நகைக் கடன் ஆகியவை பொதுமக்களின் வைப்புத் தொகை கொண்டு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்தக் கூற்று வங்கியின் கீழ் அதே கட்டிடத்தில் நியாய விலை கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த கடந்த 2019 முன்பு உமா அசோகன் என்பவர் தலைவராகவும் அதன்பின் அவரது கணவர் அசோகன் கூட்டுறவு வங்கி தலைவராக செயல்பட்டு வருகிறார். இவர் அதிமுக ஒன்றிய அளவில் பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்நிலையில், அசோகன் மற்றும் உமா தலைவராக இருந்தபோது பொதுமக்களின் வைப்புத் தொகை போலி ஆவணங்கள் உருவாக்கி அதில் மோசடியில் ஈடுபட்டதாக புகார் வந்ததைத் தொடர்ந்து,  மாவட்ட பதிவாளர் உமாபதி இது குறித்து ஆய்வு மற்றும் தணிக்கைத் துறை சார்பாக மேற்கொள்ள உத்தரவிட்டார். அதில், உமா மற்றும் அசோகன் தலைவராக இருந்த போது, வங்கி செயலாளர் தேவநாதனுடன் இந்த முறைகேட்டில்  ஈடுபட்டதும் , இதேபோல் நியாயவிலைக் கடை ஊழியர் மணி என்பவர் துணையுடன் அரசுக்கு செலுத்த வேண்டிய பணம் ரூபாய் 2 லட்சத்தை வங்கியில் செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்ட தணிக்கையில் தெரிய வந்தது.

இதையடுத்து, மாவட்ட பதிவாளர் காஞ்சிபுரம் வணிக குற்றப்புலனாய்வு பிரிவில் அளித்த புகாரின் பேரில், வங்கி செயலாளர் தேவநாதன்,  தலைவர் காலூர் அசோகன்,  நியாயவிலைக்கடை ஊழியர் மணி மற்றும் முன்னாள் தலைவர் உமா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  உமா தவிர மற்ற மூவரும் கைது செய்யப்பட்டு ள்ளனர். முன்னாள் தலைவர் உமா வெளியூர் சென்று இருப்பதால், அவரை கைது செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.  இவர்கள் அனைவரும் சேர்ந்து கீழ் பெரம்பலூர் தொடக்க கூட்டுறவு வங்கியில் ரூபாய் 34 லட்சம் கையாடல் செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.


Tags:    

Similar News