காஞ்சிபுரத்தில் 19 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, ரூ.2.16 கோடி கடன் வழங்கபட்டது

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் இந்தியன் வங்கி கிளையில் 19 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2.16 கோடி மதிப்பிலான கடன்களை மண்டல மேலாளர் ஸ்ரீமதி வழங்கினார்.

Update: 2021-07-12 13:45 GMT

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவிக்கான காசோலையை வழங்கும் இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் ஸ்ரீமதி.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் இந்தியன் வங்கி கிளை சார்பாக 19 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2.16 கோடி கடன் வழங்கும் விழா இன்று  நடைபெற்றது.

இவ்விழாவிற்கு இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் ஸ்ரீமதி தலைமை வகித்து பல்வேறு தொழில் அபிவிருத்தி க்கா 19 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2.16 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்.

இவ்விழாவில்  உதவிப் பொதுமேலாளர் சந்திரசேகர் ராவ், மண்டல உதவிப் பொதுமேலாளர் கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வே.சண்முகராஜ் வரவேற்றார்.

விழாவில் மகளிர் திட்டத்தின் திட்ட இயக்குநர் ஸ்ரீனிவாசராவ், உதவித் திட்ட அலுவலர் வீரமணி, நிதி ஆலோசகர் அரங்கமூர்த்தி ஆகியோர் உட்பட வங்கி மேலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News