காஞ்சிபுரத்தை அடுத்த ஆர்ப்பாக்கம் கல்குவாரி குட்டையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம் , ஆர்ப்பாக்கம்- சுருட்டல் செல்லும் சாலையில் ஆர்ப்பாக்கம் அருகே தண்ணீர் குட்டையில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக மாகறல் போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், இறந்த நபர் ஆர்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பதும்,அருகிலுள்ள தனியார் தோட்டப் பண்ணையில் கூலி வேலை செய்து வந்ததும், இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு காணாமல் போனதால் குடும்பத்தினர் தேடி வந்துள்ளனர்.சுப்பிரமணி மது போதையில் குட்டை அருகே சென்று தவறி விழுந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.