சுங்குவார்சத்திரம் காவல் நிலைய காவலருக்கு காந்தியடிகள் காவல் விருது

சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் அசோக் பிரபாகரன் காந்தியடிகள் காவல் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Update: 2021-10-02 06:15 GMT

அண்ணல் காந்தியடிகள் காவல் விருதுபெறவுள்ள தலைமை காவலர் அசோக் பிரபாகரன்.

கள்ள சாய்ராம் ஒழிப்பு உள்ளிட்ட பணிகளில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு மாகத்மா காந்தியடிகள் பிறந்தநாளன்று விருதுகள் காவல்துறை சார்பில் அறிவிக்கப்படும். அவ்வகையில் இந்த ஆண்டிற்கான காந்தியடிகள் காவல் விருது ஐந்து காவல் துறை அலுவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மத்திய புலனாய்வு பிரிவு வடக்கு மண்டல டிஎஸ்பி தட்சிணாமூர்த்தி ,  வேலூர் மண்டலம் மத்திய புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் குமார் , கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் சக்தி ,  திருச்சி மாவட்டம் முசிறி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிதம்பரம் , காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் காவல் நிலைய தலைமைக் காவலர் அசோக் பிரபாகரன் ஆகியோருக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் கடந்த காலங்களில் கல்லறை சாராய ஒழிப்பு பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியதற்காக இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்,  வரும் குடியரசு தினத்தன்று முதல்வர் விருது வழங்கி கௌரவித்தார் விருதுடன் பரிசு தொகையாக தலா 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

காஞ்சி மாவட்ட காவல்துறையில் தலைமை காவலர் காந்தியடிகள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது  அனைத்து காவலருக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. 

Tags:    

Similar News