ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் புதிதாக 163 நபர்களுக்கு வைரஸ் தொற்று

ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டத்தில் மாங்காடு , குன்றத்தூர் , ஸ்ரீபெரும்புதூர் என பல பகுதிகளில் 163 நபர்களுக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2021-04-27 12:45 GMT

ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டத்தில் உள்ள குன்றத்தூர், மாங்காடு மற்றும் ஸ்ரீபெரும்புதூர் என பல பகுதிகளில் கொரோனா பரிசோதனைகள்  மேற்கொண்டதில் 163 நபர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குன்றத்தூரில் 112 நபர்களுக்கும் ,  குன்றத்தூர் பேரூராட்சி 10 நபர்களுக்கும் ,  மாங்காடு பகுதியில் 9 நபர்களுக்கும் ,  ஸ்ரீபெரும்புதூரில் 31 நபர்களுக்கும் ,  ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் ஒரு நபருக்கும் என மொத்தம் 163 நபர்கள் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனையில் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்

Tags:    

Similar News