குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

கள்ளக்குறிச்சி அருகே பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2021-07-18 05:11 GMT

கைது செய்யப்பட்ட அலெக்சாண்டர்.

கள்ளக்குறிச்சி அருகே பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட எறையூர் கிராமத்தை சேர்ந்தவர்  அலெக்சாண்டர் (வயது26). இவர் அப்பகுதிகளில் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளார். 

போலீசார் வலைவீசி தேடிவந்தநிலையில், அலெக்சாண்டரை கைது செய்தனர். இதனையடுத்து, அந்த வாலிபைர குண்டர் தடுப்பு சட்டத்தில் ஓராண்டு காலம் சிறையில் அடைக்க கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News