கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கஞ்சா வைத்திருந்த இருவர் கைது: போலீசார் அதிரடி

கள்ளக்குறிச்சி மாவட்டம், ஆத்தூர் கிராமத்தில் கஞ்சா வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-12-11 14:51 GMT

கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட இருவர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தொகுதிக்குட்பட்ட திருநாவலூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஆத்தூர் கிராமத்தில் கஞ்சா வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

அதன்படி ஆத்தூர் கிராமத்தில் போலீசார் நடத்திய சோதனையில், மார்கண்டேயன் மகன் வேலாயுதம் வயது 56 மற்றும் மரகதபுரம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் சத்யராஜ் வயது 33 என்பவர்களிடமிருந்து 600 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் அவர்கள் இருவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News