ஊரக உள்ளாட்சி தேர்தல்: உளுந்தூர்பேட்டை ஒன்றியம் 4வது வார்டில் 7 பேர் போட்டி

ஊரக உள்ளாட்சி தேர்தலில் உளுந்தூர்பேட்டை ஒன்றியம் 4வது வார்டில் 7 முனை போட்டி நிலவி வருகிறது.

Update: 2021-10-03 13:06 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 6ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

இதில் 4வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு நாராயணமூா்த்தி- தேசிய முற்போக்கு திராவிட கழகம், சிலம்பரசன்- பாரதிய ஜனதா கட்சி, ஏழுமலை- சுயேட்சை, ஸ்ரீதர்- பாட்டாளி மக்கள் கட்சி, தங்கமணி- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், அரிகிருஷ்ணன்- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாக்சிஸ்ட்), அந்தோனி- நாம் தமிழர் கட்சி ஆகிய 7 பேர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் 7 வேட்பாளர்களும் கிராமம் கிராமாக தங்களுக்கான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் தற்போது பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

Tags:    

Similar News