ஊரக உள்ளாட்சி தேர்தல்: உளுந்தூர்பேட்டை ஒன்றியம் 2வது வார்டில் 4 முனை போட்டி

ஊரக உள்ளாட்சி தேர்தலில் உளுந்தூர்பேட்டை ஒன்றியம் 2வது வார்டில் 4 முனைப் போட்டி நிலவி வருகிறது.

Update: 2021-10-03 12:53 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 6ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

இதில் 2வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு ராஜவேல்- திராவிட முன்னேற்றக் கழகம், அங்கராயன்- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், செல்வம்- தேசிய முற்போக்கு திராவிட கழகம், மோகன்தாஸ்- நாம் தமிழர் கட்சி ஆகிய 4 பேர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் 4 வேட்பாளர்களும் கிராமம் கிராமாக தங்களுக்கான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் தற்போது பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

Tags:    

Similar News