ஊரக உள்ளாட்சி தேர்தல்: உளுந்தூர்பேட்டை ஒன்றியம் 14வது வார்டில் 5 முனை போட்டி

ஊரக உள்ளாட்சி தேர்தலில் உளுந்தூர்பேட்டை ஒன்றியம் 14வது வார்டில் 5 முனை போட்டி நிலவி வருகிறது.

Update: 2021-10-04 03:44 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 6ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

இதில் 14வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு ராதா- திராவிட முன்னேற்றக் கழகம், குல்சும்பீ - அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், சங்கீதா- தேசிய முற்போக்கு திராவிட கழகம், ஷாகிதா- எஸ்டிபிஐ, ஜெயப்பிரதா - பாரதிய ஜனதா கட்சி ஆகிய 5 பேர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் 5 வேட்பாளர்களும் கிராமம் கிராமாக தங்களுக்கான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் தற்போது பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

Tags:    

Similar News