ஊரக உள்ளாட்சி தேர்தல்: உளுந்தூர்பேட்டை ஒன்றியம் 6வது வார்டில் 8 பேர் போட்டி

ஊரக உள்ளாட்சி தேர்தலில் உளுந்தூர்பேட்டை ஒன்றியம் 6வது வார்டில் 8 முனை போட்டி நிலவி வருகிறது.

Update: 2021-10-03 15:29 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 6ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

இதில் 6வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு நடையம்மை- திராவிட முன்னேற்றக் கழகம், அலமேலு- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், முத்தம்மாள் - தேசிய முற்போக்கு திராவிட கழகம், பாா்வதி- பாட்டாளி மக்கள் கட்சி, சீத்தாலட்சுமி - பாரதிய ஜனதா கட்சி, அமிர்தம் - நாம் தமிழர் கட்சி, ரங்கநாயகி, ரேவதி - சுயேட்சை ஆகிய 8 பேர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் 8 வேட்பாளர்களும் கிராமம் கிராமாக தங்களுக்கான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் தற்போது பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

Tags:    

Similar News