ஊரக உள்ளாட்சி தேர்தல்: உளுந்தூர்பேட்டை ஒன்றியம் 5வது வார்டில் 8 பேர் போட்டி

ஊரக உள்ளாட்சி தேர்தலில் உளுந்தூர்பேட்டை ஒன்றியம் 5வது வார்டில் 8 முனை போட்டி நிலவி வருகிறது.

Update: 2021-10-03 13:28 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 6ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

இதில் 5வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு செல்வராசு- திராவிட முன்னேற்றக் கழகம், கணேசன்- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், கோவிந்தன்- தேசிய முற்போக்கு திராவிட கழகம், சந்தோஷ்குமார்- பாரதிய ஜனதா கட்சி, ஜெய்சங்கர்- நாம் தமிழர் கட்சி, கிருஷ்ணமூா்த்தி, க.ஏழுமலை, கி.ஏழுமலை- சுயேட்சை ஆகிய 8 பேர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் 8 வேட்பாளர்களும் கிராமம் கிராமாக தங்களுக்கான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் தற்போது பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

Tags:    

Similar News