கள்ளக்குறிச்சியில் விவசாயிகளுக்கு இப்காே நானோ யூரியா: கலெக்டர் வழங்கல்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் விவசாயிகளுக்கு இப்காே நானோ யூரியா வழங்கினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கானந்தலில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையுடன் இப்காே நிறுவனம் இணைந்து நானாே யூரியா செயல் விளக்க கூட்டம் நடத்தியது.
அதில் அரசு விதைப் பண்ணையில் இப்கோ நானோ யூரியா நிறுவனத்தின் சார்பில் பத்து முன்னோடி விவசாயிகளுக்கு 500 மில்லி லிட்டர் திரவ யூரியாவினை (இப்கோ நானோ யூரியா) மாவட்ட ஆட்சித் தலைவர் பி.என்.ஸ்ரீதர் அவர்கள் வழங்கினார்.