திருநாவலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் கலெக்டர் ஆய்வு

உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில், கள்ளக்குறிச்சி கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-07-31 05:46 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒடப்பான்குப்பம் கிராமத்தில் கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மேற்கொள்ளும் முந்திரி கொட்டைகள் தோல் நீக்கம் செய்யும் பணி தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார். உடன் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் சு.தேவநாதன் மற்றும் திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணன் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News