உளுந்தூர்பேட்டை அருகே 19 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

கீழனூர் பகுதியில் 19 மூட்டை ரேஷன் அரிசி அனாதையாக கிடந்துள்ளது.

Update: 2021-08-08 15:14 GMT

கீழனூர் பகுதியில் அனாதையாக கிடந்த 19 மூட்டை ரேஷன் அரிசியை தாசில்தார் கோபாலகிருஷ்ணன் பறிமுதல் செய்தார்.

கள்ளகுறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதிக்குட்பட்ட கீழனூர் பகுதியில் 19 மூட்டை ரேஷன் அரிசி அனாதையாக கிடந்துள்ளது.

இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து சென்றனர். நீண்ட நேரமாகியும் யாரும் அரிசி மூட்டைகளை எடுக்க வராததால் தாசில்தாருக்கு  தகவல் கொடுத்தனர்.

பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் உளுந்தூர்பேட்டை தாசில்தார் கோபாலகிருஷ்ணன் பறிமுதல் செய்தார்.

Tags:    

Similar News