அலம்பளம் கிராமத்தில் பிரதமர் வீடுகட்டும் திட்டப்பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கல்
பிரதமர் குடியிருப்பு வீடுகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் ராஜாமணி பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கினார்;
பயனாளிகளுக்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டப்பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கிய ஊராட்சித்தலைவர்
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், அலம்பளம் கிராமத்தில் பிரதமர் குடியிருப்பு வீடுகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் ராஜாமணி மாரியப்பிள்ளை தலைமையில் பணி ஆணைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஒன்றிய கவுன்சிலர் பூங்கலியன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தேவி,ஒன்றிய பணி மேற்பார்வையாளர் முருகன், அவர்களுடன் வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி செயலாளர் முருகேசன் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.