டாக்டர்.அப்துல்கலாம் பிறந்தநாள்: பசியில்லா சங்கரன்கோவில் சார்பில் ஓவியப்போட்டி

முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர்.அப்துல்கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு பசியில்லா சங்கரன்கோவில் சார்பில் ஓவியப்போட்டி.

Update: 2021-10-15 04:30 GMT

டாக்டர்.அப்துல்கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு மாணவ, மாணவிகள் அப்துல்கலாமின் படத்தை பல்வேறு விதங்களில் ஓவியமாக வரைந்துள்ளனர்.

முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர்.அப்துல்கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு பசியில்லா சங்கரன்கோவில் சார்பில் ஓவியப் போட்டி நடைபெற்றது.

முன்னாள் குடியரசுத்தலைர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பசியில்லா சங்கரன்கோவில் அறக்கட்டளை சார்பில் அப்துல் கலாம் படம் வரையும் ஓவியப் போட்டி நடைபெற்றது.

இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அப்துல்கலாமின் படத்தை பல்வேறு விதங்களில் ஓவியமாக வரைந்துள்ளனர். இதில் சிறந்த ஓவியத்திற்கு இன்று மாலை பரிசு வழங்கப்படும் என பசியில்லா சங்கரன்கோவில் நிறுவனர் சங்கரசுப்பிரமணியன் தெரிவித்தார்.

Tags:    

Similar News