கள்ளக்குறிச்சி மாவட்டம் பொரசக்குறிச்சி ஊராட்சியில் கலெக்டர் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம் பொரசக்குறிச்சி ஊராட்சியில் நடைபெறும் பல்வேறு பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார்

Update: 2021-07-16 12:11 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் பொரசக்குறிச்சி ஊராட்சியில் கலெக்டர் ஆய்வு 

கள்ளக்குறிச்சி மாவட்டம், பொரசக்குறிச்சி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் தனிநபர் கிணறு வெட்டும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் பி .என்.ஸ்ரீதர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் பொரசக்குறிச்சி ஊராட்சியில் தனிநபர் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்ட நான்கு ஏக்கர் நிலத்தில் பல்வேறுவிதமான மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்தார்.

பாரத பிரதமர் வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் தொகுப்பு வீடுகளில் கட்டுமான பணிகள் குறித்தும் கேட்டறிந்தார் 

Tags:    

Similar News