கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரும் 14ம் தேதி முதல் குடற்புழு நீக்க மாத்திரைகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரும் 14ம் தேதி முதல் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கபடுகிறது.

Update: 2022-03-15 15:46 GMT

பைல் படம்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கும் திட்டத்தின்கீழ் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படவுள்ளன.

இந்த மாத்திரைகளை வரும் 14ம் தேதி முதல் 19ம் தேதி வரை (15.03.2022 மற்றும் 16.03.2022 தவிர) பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவ பி.என்.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News