ரஜினிகாந்துக்கு 15 நாள் நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவு

ரஜினிகாந்துக்கு 15 நாள் காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு: திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Update: 2021-12-01 12:20 GMT

திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்படும் ரஜினிகாந்த் 

கரூரில் 11ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட டாக்டர் ரஜினிகாந்தின் நீதிமன்ற காவல் மேலும் 15 நாள்களுக்கு நீட்டிக்கக்பட்டது.

    கரூரில் 11ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறுமியின் தாய் கடந்த 14ஆம் தேதி கரூரில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  இந்த புகார் வழக்கில் பிரபல எலும்பு முறிவு மருத்துவர் ரஜினிகாந்த் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து இரண்டு நாட்கள் தேடப்பட்டு வந்த நிலையில் கடந்த 17ம் தேதி கைது செய்யப்பட்டு மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

     கரூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி நசீமா பானு மருத்துவர் ரஜினிகாந்த்துக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இன்றுடன் 15 நாள் நீதிமன்ற காவல் முடிவடையும் நிலையில், மீண்டும் மருத்துவர் ரஜினிகாந்த் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி நசீமா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    மருத்துவர் ரஜினிகாந்துக்கு மேலும் 15 நாள் நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து அவர் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Tags:    

Similar News