துபாயில் இருந்து சென்னைக்கு ரூ.20 லட்சம் மதிப்பு தங்கம் கடத்தல்: தஞ்சை பயணி கைது

துபாயில் இருந்து சென்னைக்கு ரூ.20 லட்சம் மதிப்பு தங்கம் கடத்திய தஞ்சை பயணி கைது செய்யப்பட்டார்.

Update: 2021-05-09 12:58 GMT

சென்னை விமான நிலையத்தில் கடத்தப்பட்ட தங்கம்.

துபாயில் இருந்து சென்னைக்கு வந்த சிறப்பு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்புடைய 451 கிராம் தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு, தஞ்சாவூரை சோ்ந்த பயணி கைது  செய்யப்பட்டார்.

துபாயில் இருந்து ஏா்இந்தியா சிறப்பு விமானம் இன்று சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினா் சோதனையிட்டனா். அப்போது தஞ்சாவூரை சோ்ந்த லியாகத்அலி(26) என்ற பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி சோதனையிட்டனா். அவருடைய உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த 451 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனா். அதன் சா்வதேச மதிப்பு ரூ.20 லட்சம். இதையடுத்து பயணி லியாகத்அலியை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News