கொரோனா நிவாரணத் தொகை மற்றும் மளிகை பொருட்கள் பெற கால அவகாசம் நீட்டிப்பு

தமிழகத்தில் கொரோனா நிவாரணத் தொகை மற்றும் மளிகை பொருட்கள் பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Update: 2021-07-25 07:14 GMT
பைல் படம்

தமிழகத்தில் கொரோனா நிவாரணத் தொகை மற்றும் மளிகை பொருட்கள் பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா நிவாரண தொகையான 4,000 ரூபாயை இதுவரை பெறாதவர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் பெற்றுக்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. புதிய குடும்ப அட்டைதார‌ர்களும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என  தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News