நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்வு- ஒரு முட்டை ரூ. 4.75

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கிடு கிடு என உயர்ந்து உள்ளது. ஒரு முட்டை ரூ. 4.75 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-05-19 01:08 GMT

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 25 பைசா உயர்ந்து, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ.4.75 ஆனது.

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி.) கூட்டம் அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், ஏற்கனவே ரூ. 4.50ஆக இருந்த ஒரு முட்டையின் விலை 25 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 4.75 ஆக நிர்ணயிக்கப்பட்டது. முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) :-

சென்னை 490, பர்வாலா 422, பெங்களூர் 470, டெல்லி 448, ஹைதராபாத் 455, மும்பை 510, மைசூர் 485, விஜயவாடா 465, ஹெஸ்பேட் 430, கொல்கத்தா 535. இந்த நிலையில் முட்டை மொத்த விற்பனையாளர்களுக்கு வழங்க வேண்டிய மைனஸ் விலை ஒரு முட்டைக்கு 30 பைசாவாக நெஸ்பாக் அறிவித்துள்ளது. இதனால் பண்ணையாளர்களுக்கு ஒரு முட்டைக்கு ரூ.4.45 கிடைக்கும். கடந்த 12ம் தேதி ரூ.3.65 ஆக இருந்த முட்டை விலை படிப்படியாக ஒரு முட்டைக்கு ரூ.1.10 உயர்ந்து, ஒரு வாரத்தில் ரூ.4.75 ஆனதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ.132 ஆக பி.சி.சி. அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 105 ஆக பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

Tags:    

Similar News