வேடசந்தூர் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Update: 2021-03-25 10:45 GMT

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அதிமுக வேட்பாளர் பரமசிவம் தேர்தல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் பரமசிவம் இன்று தட்டாராம்பட்டி, அடைக்கனூர் , பாறையூர், சொக்கலிங்கபுரம், கூவக்காபட்டி, அழகாபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தமிழக அரசின் சாதனைகளை எடுத்து கூறியும், தற்போது 2021 சட்டமன்ற தேர்தல் அதிமுக தேர்தல் வாக்குறுதிகளான வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் இலவசம், மாதம் குடும்ப பெண்மணிகளுக்கு ரூ. 1500 வழங்குதல் , முதியோர், மாற்று திறனாளிகள், கணவனை இழந்த பெண்கள் உள்ளிட்டோருக்கான நிதி உதவி உயர்ந்தி வழங்குதல் உள்ளிட்ட வாக்குறுதிகளை பொதுமக்களிடம் எடுத்து கூறி வாக்குகள் சேகரித்தார். முன்னதாக வேட்பாளர் பரமசிவம் செல்லும் இடமெல்லாம் இரட்டை இலை கோலங்கள் இட்டும், வெடி வெடித்தும் , ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Tags:    

Similar News