பழனி திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உயிரிழந்தார்

பழனி திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் கொரானா பாதிப்பால் உயிரிழந்தார்.

Update: 2021-06-11 07:55 GMT

பழனி திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் 

திண்டுக்கல் மாவட்டம் பழனி தொகுதி  திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் அன்பழகன். இவரது தந்தை நெல்லை மாறன் திமுக தலைமை கழக பேச்சாளராக பொறுப்பு வகித்தவர். 65வயதான அன்பழகனின் மனைவி பேபி பொன்மணி. இவர் ஓய்வு பெற்ற அரசு ஆசிரியை. இவர்களுக்கு எஸ்தர் ஜானிகா என்ற மகள் உள்ளார்.

மதுரை மாவட்டம் பேரையூர் இவரது சொந்த ஊராகும். இந்திய காப்பீட்டு கழகத்தில் வளர்ச்சி அதிகாரியாக பணிபுரிந்து வந்த அன்பழகன் தனது பணியை கடந்த 2006ம் ஆண்டு ராஜினாமா செய்துவிட்டு திமுக வேட்பாளராக பழனி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இவர் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அன்பழகன் உடல் மதுரை மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான பேரையூரில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

Tags:    

Similar News